விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.
இப்படம் கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின் சில வாரங்கள் கழித்து சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள தங்கலான் படப்பிடிப்பு இந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் முழுமையாக நிறைவு பெற்றுவிடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் 6 மாத காலம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதனால் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
தங்கலான் திரைப்படம் தமிழ் சினிமாவிலேயே உலகத்தரம் வாய்ந்த திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.