spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசண்டக்கோழி வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு... விஷால் நெகிழ்ச்சி...

சண்டக்கோழி வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு… விஷால் நெகிழ்ச்சி…

-

- Advertisement -
சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, படத்தின் நாயகன் விஷால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விஷாலுக்கு திரையுலகில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி திரைப்படம் மெகா சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. படத்தில் விஷாலுக்கு இணையாக ராஷ்கிரண் நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டது. மேலும், நாயகியாக நடித்திருந்த மீரா ஜாஸ்மின் கோலிவுட் ரசிகர்களை தன் எதார்த்த நடிப்பால் கவர்ந்து இழுந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.

சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன. இதை முன்னிட்டு, படத்தின் நாயகன் விஷால் தனது சமூக வலைதப்பக்கங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில், 18 ஆண்டுகளுக்கு முன்பு சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக தன் வாழ்க்கையை உருவாக்கி இந்த நாளில் நான் அனுபவிக்கும் அனைத்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மேலும்,என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குநர் லிங்குசாமி, அவர்களின் வரிசையில் மேலே உள்ள கடவுளுக்கும் நான் வணங்கி நன்றி கூறுகிறேன்.
we-r-hiring

இறுதியாக உலகளவில் பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் நான் பார்க்கும் கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். எனது தந்தை ஜிகே ரெட்டி மற்றும் குரு அர்ஜூன் ஆகியோரின் இந்த கனவை தொடர்வேன் என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

MUST READ