காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் காந்தாரா. இந்த படம் 40 ரூபாய் கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. ரிஷப் ஷெட்டி, இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார்.
எனவே ரிஷப் ஷெட்டி, காந்தாரா 2 திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இந்த படமானது முதல் பாகத்தின் பிரீக்குவலாக கிபி 301 – 400 காலகட்டங்களில் நடப்பது போன்று உருவாகி வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் கர்நாடகாவில் குண்டப்புரா பகுதியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி காந்தாரா 2 திரைப்படத்தினை 2025 கோடை விடுமுறையில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனராம். மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. காந்தாரா 2 திரைப்படத்தினை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம், பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.