துணியை அயன் செய்யும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். திருவள்ளூரில் பள்ளி மாணவர் ஒருவர் துணியை அயன் செய்யும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த விடையூர் நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரிபாபு அவருடைய மகன்
தீபக்குமார் (14). சிறுவன் தீபக்குமார் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்றைய தினம் தீபக் குமார் வீட்டில் தனது சட்டைக்கு மின்சார சலவைப் பெட்டியினால் அயன் போடும்போது வொயரில் மின்கசிசு ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இருந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஒருவர்
உதவியுடன் விடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடலில் எந்தவித முன்னேற்றம் என்றதால் மேல் சிகிச்சைக்காக பாண்டூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கேயும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடலில் எந்த வித முன்னேற்றம் இல்லை என்றனர். பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி பலியானதை தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார அயன் பாக்ஸ் மூலம் துணியை தேய்ப்பதற்கு முன்பு வொயரை நன்கு சோதித்து பார்த்து அயன் செய்ய வேண்டும்.