spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்17 வயது சிறுவன் அடித்துக் கொலையா??- மணலி போலீசார் விசாரணை

17 வயது சிறுவன் அடித்துக் கொலையா??- மணலி போலீசார் விசாரணை

-

- Advertisement -

பன்றி திருடியதாக 17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற இளைஞர்கள்-சிறுவன் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை

17 வயது சிறுவன் அடித்துக் கொலையா??- மணலி போலீசார் விசாரணை

சென்னை மணலி சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் – தேவியின் மகன்  சஞ்சய் ( 17).இவன் ஐந்தாவது வகுப்பு மட்டுமே படித்துவிட்டு பன்றி வளர்ப்பது, விற்பனை செய்வது போன்ற  தொழிலில் ஈடுபட்டு வருகிறான்.

இதனிடையே அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள், அண்ணன் தம்பிகளான தர்மா மற்றும் பாபு ஆகிய இருவரும் பன்றி வளர்ப்பது விற்பனை செய்வது என தொழில் செய்து வருகிறார்கள்.

we-r-hiring

கடந்த வாரம் தர்மா வளர்க்கும் பன்றிகளை சஞ்சய் திருடி வந்து விட்டதாக கூறி நேற்று காலை சிறுவன் சஞ்சய் வீட்டிற்கு வந்து சிறுவனை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர்.நேற்று முழுவதும் சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில், இன்று காலை சிறுவன் சடலமாக சாக்கு மூட்டையில் கிடந்ததால் சிறுவனின் தாயார் தேவி மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான தர்மா பாபு மற்றும் உடன் இருந்த கூட்டாளிகள் நான்கு பேரையும்  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சக உறவினர்களே சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ