spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய உறவினர்கள்... புதுச்சேரியில்...

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய உறவினர்கள்… புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!

-

- Advertisement -

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு, சிறு மியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

we-r-hiring

புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் புதுச்சேரி மாநில பாஜக விவசாய அணியின் மாநில தலைவரும், சபாநாயகர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான ராமு என்பவருக்கு சொந்தமான செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நோனாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆசிரியர் மணிகண்டன், அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் கடந்த 4 மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னிடம் ஆசிரியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று இதுகுறித்து கேட்டபோது, பள்ளி நிர்வாகம் தரப்பில் சரியான பதில் கூறவில்லை என தெரிகிறது. மேலும் பள்ளியின் நிறுவனரும், பாஜக பிரமுகரான ராமு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இவ்விவாகாரத்தை மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், இதுதொடர்பாக தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகரா் அளித்தனர். ஆனால் காவல்துறையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், தாமதப்படுத்தியதாத கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியை சூறையாடிய சிறுமியின் உறவினர்கள், ஆசிரியர் மணிகண்டன் மற்றும் பள்ளியின் நிறுவனர் ராமு மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, கைது செய்யக்கோரி புதுச்சேரி – கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி – கடலூர் சாலையில் சுமார் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை விசாரணைக்காக பள்ளியில் இருந்து போலீசார் காவல்நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது, ஆசிரியரை பொதுமக்களும், உறவினர்களும் சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான செல்வம், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், டிஐஜி சத்திய சுந்தரம் உள்ளிட்டோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிய செய்யப்பட்டு, பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார். எனினும் பள்ளியின் நிறுவனர் ராமுவை கைது செய்யும் வரை தங்களது மறியலை கைவிட மாட்டோம் என சிறுமியின் உறவினர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் போராட்டம் நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடைபெற் பள்ளியில் இன்று நடைபெறுவதாக இருந்த செய்முறை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

MUST READ