Homeசெய்திகள்க்ரைம்நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை

நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை

-

- Advertisement -

திருவெண்ணெய்நல்லூர் அருகே நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், அடுத்த மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்த இந்திராணி(75) இவருக்கு இரண்டு மகன் மூன்று மகள் உள்ளனர், இவர்கள் அனைவரும் சென்னை மற்றும் வெளியூரில் உள்ளனர், வீட்டில் தனியாக வசித்து வருகிறார் மூதாட்டி இந்திராணி இவர் நேற்று காலை முதல் காணவில்லை என அக்கம்பக்கத்தினர் இந்திராணி மகன் மகளுக்கு தெரிவித்தனர், உடனடியாக வந்த மகன் பன்னீர்செல்வம் என்பவர் எனது அம்மா இந்திராணி காணவில்லை என நேற்று திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போது அதே கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் சிவசங்கர் (23) மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர், மூதாட்டி இந்திராணியிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 30,000 பணம் வாங்கியுள்ளார் சிவசங்கர், கடனை இரண்டு முறை மூதாட்டி சிவசங்கரிடம் கேட்டுள்ளார், அதற்கு நான் இப்போது தர மாட்டேன் என்னிடம் பணம் இருக்கும் போது கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

மூதாட்டி இந்திராணி வீட்டில் தனியாக வசித்து வருகிறார் என்பது சிவசங்கருக்கு தெரியவந்தது இதனால் சிவசங்கர் இந்திராணியிடம் நான் உங்கள் பணம் தருகிறேன் என்று இந்திராவிடம் கூறியுள்ளார், சிவசங்கர் என்பவர் எங்களுடைய வீட்டிற்கு நீங்கள் வந்தால் நான் நீங்கள் கொடுத்த பணத்தை நான் தருகிறேன் என்பது தெரிவித்துள்ளார், என்பது கூறப்படுகிறது இந்திராணி என்பவர் சிவசங்கர் வீட்டிற்கு-19.12.2022 காலை 10 மணி அளவில் வீட்டிற்கு சென்று உள்ளார் அப்போது சிவசங்கர் என்பவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது மூதாட்டி இந்திராணி கழுத்தில் காதில் போட்டிருந்த நகை பார்த்தவுடன் அவரை காதில் இருந்த நகை மற்றும் கழுத்தில் இருந்து செயின் பிடுங்கும்போது அவர் அலறும் சத்தம் கேட்டபோது வாயை மூடி கழுத்தை நெரித்து தடியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை மறைக்கும் நோக்கத்தில் சிவசங்கர் தனது வீட்டிலேயே இறந்து போன மூதாட்டியை உடலை புதைத்து விட்டு தனது மனைவியின் சேலம் மாவட்டத்திற்கு தப்பித்து சென்று உள்ளார், என்பது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து போலீசார் சிவசங்கர் வீட்டிற்கு போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தப்பி குற்றவாளி சிவசங்கரனை தேடி வருகின்றனர், இதுகுறித்து,திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ