Homeசெய்திகள்க்ரைம்இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

-

- Advertisement -

இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

இண்டிகோ விமானங்களுக்கு  தொடரும் வெடிகுண்டு மிரட்டல் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் தேதி  இரவு 8.45 மணியளவில், பெரும்பாக்கத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு, சென்னை-மும்பை விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும்,  இரவு 9:45 மணிக்கு வெடிக்கும் என்றும் ஒரு கஸ்டமர் கேர் சேட்  -ல் (Customer Care Chat) செய்தி வந்துள்ளது.

மெரினாவில் போராட்டமா?? – காவல்துறை தீவிர ரோந்து..

உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம், இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை புகாரின் அடிப்படையில் ஜூன் 21 ஆம் தேதி அன்று சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  மிரட்டல் அனுப்பப்பட்ட சேட் (Chat) மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர். ஆய்வின் அடிப்படையில் இந்த மிரட்டல் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் உள்ள ஒரு லேண்ட் லைன் எண்ணின் இணையதள இணைப்பு மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

புலன் விசாரணை அதிகாரி புஷ்பராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம் தலைமையிலான குழுவினரின் விசாரணையில், அந்த நபர் திருவையாறைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் வெ.பிரசன்னா, (27) என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் போலீசார் அவரை திருவையாறில் கைது செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் அனுப்ப பயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி போன், இன்டர்நெட் மோடம் மற்றும் ரூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரனையில் ,பிரசன்னா சென்னை பெரம்பூர் அருகாமையில் வசித்த குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட  பிரசன்னா விசாரணைக்குப் பின்னர் இன்று  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு எடுத்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களின் பாதுகாப்பே கருத்தில் கொண்டு இது போன்ற போலியான அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் இனி வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ