Homeசெய்திகள்க்ரைம்தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் கைது

தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் கைது

-

தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் கைது

தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை வாரணிசியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்ட தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில் 4 மாதங்களாக தேடப்பட்டு வந்துள்ளார்.

தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் கைது

இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து‌ மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்துள்ளனர்.

MUST READ