spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்முசிறி அருகே கொலை - போலீஸ் வலை வீச்சு

முசிறி அருகே கொலை – போலீஸ் வலை வீச்சு

-

- Advertisement -

முசிறி அருகே கொலை –  போலீஸ் வலை வீச்சு

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் இரு வேறு  பாலங்களுக்கு அடியில் படுகொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட இரண்டு ஆண் சடலங்கள் கண்டெடுப்பு சம்பவம் பற்றி  கொத்தம்பட்டி பொன்னுசங்கம்பட்டி பாலம் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் விசாரணை செய்தார்.

முசிறி அருகே கொலை -  போலீஸ் வலை வீச்சு

we-r-hiring

கொத்தம்பட்டி பாலத்தில் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு ஆண் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கே வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொத்தம்பட்டி பாலத்திற்கு அடியில் மேலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில்  தலையில் வெட்டு காயங்களுடன் முகம் சிதைந்து ஆண் சடலம் ஒன்று இருந்ததன. உடனடியாக அடையாளம் தெரியாத அந்த ஆண் சடலத்தை மீட்டு துறையூர் போலீசார் உடற் கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ள பொண்ணுசங்கம்பட்டி பாலம் அருகே இதேபோல் தலையில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக ஜம்புனாதபுரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை செய்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்த இரண்டு கொலைச் சம்பவங்களையும் ஒரே தரப்பினர் செய்தார்களா கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

10 கிலோமீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு பாலங்களுக்கு அடியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு ஆண் சடலங்கள் கிடந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ