வாய்க்கால் அருகே சடலமாக கிடந்த ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பழைய வத்தலகுண்டு அருகே மஞ்சளார் ஆற்றின் வாய்க்கால் கரை ஓரத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த J N. பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே, J.N. பாளையத்தைச் சேர்ந்த, ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிவக்குமார், (40) இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, மனவேதனையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவிற்கு பேருந்தில் வந்துள்ளார்.
பின்னர், வத்தலகுண்டில் இருந்து, பழைய வத்தலகுண்டு வரை நடந்து சென்றுள்ளார். அங்கு மஞ்சளாற்று வாய்க்கால் கரை ஓரத்தில் விஷம் அருந்தி மயங்கி நிலையில் கிடைத்துள்ளார். இந்த வழியாக சென்றவர்கள் வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை 108 ஆம்புலன்சில் தூக்கிச் சென்று, வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து, வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ஊராட்சி மன்ற தலைவர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.