Homeசெய்திகள்க்ரைம்கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கில் பள்ளி ஆசிரியை கைது

கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கில் பள்ளி ஆசிரியை கைது

-

- Advertisement -

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் எல்கேஜி மாணவி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஆசிரியர் ஏஞ்சலுக்கு வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவல் – விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவு.

கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கில் பள்ளி ஆசிரியை கைது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்மேரிஸ் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி மாணவி நேற்று கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவருடைய பெற்றோர் பழனிவேல் அளித்த புகார் அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, மற்றும் பள்ளி ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவர் மீதும் சந்தேக மரணம், பணியில் அஜாகரத்தையாக இருந்தது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் மூவரையும் உடல் தகுதி மருத்துவ சான்று வாங்குவதற்கு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து ரத்த அழுத்தம் அதிகரித்து காணப்பட்டுள்ளதால் இருவரையும் முண்டியாம்பக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறனர்.

மேலும் இந்த வழக்கில் கைதான வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்சை விக்கிரவாண்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யநாராயண முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்தினர். வரும் பத்தாம் தேதி  வரை 7  நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டதை தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசார்  கடலூர் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

லஞ்சம் கேட்ட செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம்

MUST READ