spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா, தங்கை கைது

தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா, தங்கை கைது

-

- Advertisement -

கோவையில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்ட சகோதரிகள் சிக்கிய சுவராசியமான கதை.

கோவையில் நூதனமுறையில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா மற்றும் தங்கை கைதான விவரம்.

we-r-hiring

தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளையடிக்கும் பிட் பாக்கெட் அக்கா தங்கை கோயம்புத்தூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த இளம் பட்டதாரி பெண் சிங்காநல்லூரில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்திருக்கின்றார்.

தனது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பேருந்தில் இருந்து இறங்கி ஆட்டோ ஒன்றில் பயணத்திருக்கின்றார் . அப்போது அப்பெண் ஆட்டோவிற்கு பணம் தரலாம் என தனது ஹேண்ட் பேக்கை திறந்து பார்த்த பொழுது அதில் இருந்த பர்ஸ் மாயமானது தெரிய வந்தது.

அதில் 300 ரூபாய் ரொக்க பணமும் இரண்டு ஏடிஎம் கார்டுகளும் இருந்தன. ஏடிஎம் கார்டில் அதற்கான பின் (PIN) நம்பரையும் அப்பெண் எழுதி வைத்திருக்கின்றார்.

இந்த நிலையில் பர்ஸ் காணாமல் போனதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இருந்த பொழுது ஏடிஎம் ஒன்றிலிருந்து 80 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததற்கான டெபிட் மெசேஜ் அப்பெண்ணின் அலைபேசி நம்பருக்கு வந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கோவை மாநகர் பகுதியில் ஒரு துணிக்கடை ஒன்றில் திருடப்பட்டிருந்த ஏடிஎம் கார்டில்  28 ஆயிரம் ரூபாய் ஸ்வைப் செய்ததாக பட்டதாரி பெண்ணுக்கு மீண்டும் ஒரு மெசேஜ் வந்திருந்தது.

அந்த ட்ரான்சேக்சன் ஐடியை வைத்துக்கொண்டு அங்கு சென்று போலீசார் விசாரித்த பொழுது இரண்டு பெண்கள் வந்ததாகவும் அவர்கள் துணியை வாங்கி விட்டு ஆட்டோவில் துணிகளை ஏற்றிக்கொண்டு சென்று விட்டதாகவும் துணி கடையின் உரிமையாளர் தெரிவித்து இருக்கின்றார்.

இந்த நிலையில் காந்திபுரம் பகுதியில் முகாமிட்ட பந்தைய சாலை போலீசார் மாற்று உடையில் இருந்த பெண்  போலீசாரிடமும் தகவல் தெரிவித்து சந்தேகத்துக்கிடமான இரண்டு பெண்களை தேடி வந்திருக்கின்றனர்.

அப்போது ஒரு நகைக்கடையில் இருந்து 50,000 ரூபாய்க்கு மேல் நகை வாங்கியதற்கான மெசேஜ் ஒன்று மீண்டும் அந்த பட்டதாரி பெண் அலைபேசி நம்பருக்கு வந்திருக்கின்றது.

உடனடியாக ஐடியை டிரேஸ் செய்து அந்த கடையின் போன் நம்பருக்கு அழைத்து போலீசார் பேசியிருக்கின்றனர். அங்கு வந்த பெண்கள் ஏடிஎம் கார்டு திருடி பொருட்களை வாங்கி இருப்பதாகவும் அவர்களை பிடித்து வைக்கும் படியும் தெரிவித்து இருக்கின்றனர்.

உடனடியாக கடையின் உரிமையாளர் பெண்களைப் பிடித்து வைத்திருக்கின்றார். உடனடியாக அங்கு சென்ற போலீசார் பர்சை திருடி பர்சேர்சிங்கில் ஈடுபட்ட பெண்களை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

அவர்களிடம் விசாரித்த பொழுது அப்பெண்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் தந்திருக்கின்றனர். பிறகு அவர்களிடம் விசாரணை தீவிர படுத்தப்பட்ட நிலையில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

மாரி என்கிற பெண் காளியம்மாள் மற்றும் லட்சுமி என்ற மூன்று பெயரில் உலா வருகின்றார். சித்ரா என்கிற பெண் செல்வி என்ற பெயரில் உலா வருகின்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தைப்பேட்டை தெருவை பூர்வீகமாகக் கொண்ட அக்கா தங்கைகளான இவர்கள் பகவதி என்ற ஒருவரையே இருவரும் திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்தவர்கள் சமீபகாலமாக பிட் பாக்கெட் போன்ற நூதன கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

சொந்த ஊரிலிருந்து பேருந்துகளில் தமிழ்நாடு முழுவதும் தேனி மதுரை, திருச்சி, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து பயணிப்பது வழக்கம்.

பயணத்தின் பொழுது கூட்ட நெரிசலிலோ அல்லது பேருந்து பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தாலோ அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் உடமைகளை, பணம், பொருள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் இவர்கள் மீது பெரம்பலூர், தேனி, சென்னை போன்ற இடங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடந்து வருவதும் தெரியவந்துள்ளது.

அக்கா தங்கைகளான இந்த இரண்டு பெண்களும் கூட்டணி போட்டு தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்று பேருந்து கூட்ட நெரிசல்களில் பெரும்பாலும் பெண்களின் பர்ஸ்களையும், பணத்தையும் திருடி சென்றிருப்பது தெரிய வந்தன.

பந்தய சாலை போலீசார் இந்த இரண்டு பெண்களிடம் இருந்தும் பர்ஸ் இரண்டு ஏடிஎம் கார்டுகள் 84 ஆயிரத்து 450 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

கைதான இரண்டு பெண்களையும் போலீசார் சிறையில் அடைத்திருக்கின்றனர். அக்கா தங்கைகளே கூட்டணி போட்டு பேருந்து கூட்ட நெரிசலில் கொள்ளை அடிக்கும் சம்பவம் அரங்கேற்றி வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

MUST READ