spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்உதவி ஆய்வாளரை வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்... சிவகங்கையில் பரபரப்பு!

உதவி ஆய்வாளரை வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… சிவகங்கையில் பரபரப்பு!

-

- Advertisement -

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால வெட்டிவிட்டு தப்பியோடி முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு பகுதியை சேர்ந்த ரவுடி சுள்ளான் அகிலன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சுள்ளான் அகிலன் காளையார்கோவில் பகுதியில் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் காவல்துறையினர் திவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

we-r-hiring

gun shooting

அப்போது, அந்த வழீயாக காரில் வந்த ரவுடி சுள்ளான் அகிலன், காளையார்கோவில் உதவி ஆய்வாளர் குகனை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் வடிவேல் தனது துப்பாக்கியால் சுட்டு அகிலனை பிடித்தார்.

chennai gun shooting

தொடர்ந்து காயம் அடைந்த ரடிவு சுள்ளான் அகிலன், உதவி ஆய்வாளர் குகன் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ரவுடி அகிலனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

MUST READ