காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பல்வேறு வழக்குகளை தொடர்புடைய பிரபாகரன் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்
காஞ்சிபுரத்தில் நேற்று கொலை முயற்சி கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்கின்ற சரவணன் காஞ்சிபுரம் பிள்ளையார் பகுதியில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.கொலை வழக்கில் தொடர்புடைய ரகு ஹுசேன் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் பொன்னேரி கரை ரயில் நிலையம் பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் போலீசார் இருவரையும் சுற்றி வலைத்து பிடிக்க முற்பட்டனர்.

அப்பொழுது ரகுவும் ஹுசேனும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.ரகுவும், ஹுசேனும், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்கியதில் சிறப்பு காவல் ஆய்வாளர் ராமலிங்கம் காவலர் சசிகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதன் காரணமாக சுதாரித்துக் கொண்ட போலீசார் தற்காப்புக்காக ரகு,மற்றும் ஹுசேன், ஆகிய இருவரையும் போலீசார் சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட இருவரது உடலும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் அண்ணன் நாராயணன் என்பவரை கடந்த ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு,என்கவுண்டர் செய்யப்பட்ட ரகு,கொலை செய்ததாகவும், அந்த கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ரகுவின் அண்ணனான தேமுதிக பிரமுகர் சரவணன் என்பவரை பிரபாகரன் வெட்டி கொலை செய்துள்ளார்.
அந்த நிலையிலே முன் விரோதம் ஏற்பட்ட நிலையில், ரகுவையும் கொலை செய்ய பிரபாகரன் வெடுகுண்டு வீசி கொலை செய்ய முயன்று உள்ளார்.அந்த கொலை முயற்சியில் ரகுவின் மாமா செந்தில் என்பவர் பிரபாகரனால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த முன் விரோதங்களால் ரகு,நேற்று தனியாக சென்ற பிரபாகரனை பிள்ளையார் பாளையம் பகுதியில் ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் பென்னி, ஆய்வு மேற்கொண்டார்.துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்து போலிசாரை தாக்க பயன்படுத்திய இரண்டு அறிவால் மற்றும் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.