Homeசெய்திகள்க்ரைம்கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது

கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது

-

கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது

கேரள மாநிலம், அங்கமாலி தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த நபரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் துறவுரை சேர்ந்தவர் லிஜி என்ற பெண்மணி, அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளியான தனது தாயைப் பார்க்க வந்துள்ளார்.

இதைத் தெரிந்து கொண்டு அங்கு வந்த லிஜியின் பள்ளி தோழர் மகேஷ் லிஜிடம் பேச வேண்டும் என்று கூறி மருத்துவமனை வராண்டாவுக்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த லிஜி, மகேஷ் இருவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லிஜியை சரமாரியாக குத்தியுள்ளார்.

கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது
உயிரிழந்த லிஜி

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே லிஜி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் கொலையாளி மகேஷை கைது செய்தனர்.  என்ன காரணத்திற்காக லிஜியை மகேஷ் கொலை செய்தார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் லிஜி திருமணமானவர் என்றும் இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், மகேஷும் லிஜியும் பள்ளி தோழர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது
கைது செய்யப்பட்ட மகேஷ்

கடந்த மே மாதம் பிளஸ் 2 படித்தவர்கள் கெட்டு கெதர் பார்ட்டியில் மகேஷும் லிஜியும் சந்தித்து நட்பை தொடர்ந்துள்ளதாகவும் இந்த நட்பில் ஏற்பட்ட விரிசலே கொலையில் முடிந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இருந்த போதும் தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் மருத்துவமனையில் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ