spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த +2 மாணவி!

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த +2 மாணவி!

-

- Advertisement -

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி!

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த +2 மாணவி!

we-r-hiring

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவரிடம் விசாரித்த போது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின் தந்தை பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானவேல் (வயது 45) பொம்மை செய்யும் தொழிலாளியாக இருந்து வந்தார்.

நேற்று(03.04.2023) அதிகாலை ஞானவேலுக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த +2 மாணவி!

ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய செய்தி அறிந்தும் அவரது மகள் கிரிஜா பிளஸ் 2 கடைசி தேர்வு என்பதால் தனது தந்தை இறந்ததை தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு நேரில் வந்து தேர்வு எழுதி உள்ளார்.

இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூரில் பள்ளி மாணவி தனது தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

MUST READ