spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உதகையில் உறை பனிப்பொழிவு அதிகரிப்பு!

உதகையில் உறை பனிப்பொழிவு அதிகரிப்பு!

-

- Advertisement -

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதம்  முதல் பிப்ரவரி மாதம் இறுதி மாதம் வரை உறைபணியின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை இருந்தது. அதேபோல் ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் மழையின் தாக்கம் இருந்ததால் உறைப்பணியின் தாக்கம் தாமதமாக துவங்கியது.

உதகையில் உறை பனிப்பொழி அதிகரிப்பு!

we-r-hiring

 

இந்த நிலையில் இன்று காலை உதகையில் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதேபோல் உதகை அருகே அவலாஞ்சி பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் உதகை நகரில் பெய்த கடும் உறைபனி பொழிவு காரணமாக சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும், நீர் நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை ஒட்டி அமைந்துள்ள புல்வெளிகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் உறை பணியின் தாக்கம் காணப்பட்டது.

உதகையில் உறை பனிப்பொழி அதிகரிப்பு!

குறிப்பாக உதகை குதிரைப் பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா, ஹெச்பி எப், லவ்டேல் உள்ளிட்ட பகுதிகளில் உறைப்பணி அதிகரித்து காணப்பட்டது. இதனால் அதிகாலையில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்பவர்கள், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் அறுவடை பணிக்கு செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் கடும் குளிர் காரணமாக நெருப்பு மூட்டி குளிரிலிருந்து தங்களை தற்காத்துக் கொண்டனர்.

உதகையில் உறை பனிப்பொழி அதிகரிப்பு!

இந்த நிலையில் வழக்கத்தை விட உதகையில் இன்று உறை பணியின் தாக்கம் காணப்பட்டதால் வரும் நாட்களில் உதகை நகரம் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்புள்ளதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைக்காய்கறியில் சாகுபடி பாதிப்படையக்கூடிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

MUST READ