பாரத் என பெயர் மாற்றுவதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரோஜா
ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட இந்தியா என்பதை காட்டிலும் பாரத் என பெயர் மாற்றுவதால் எந்தவித தவறும் இல்லை என அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில அமைச்சர்கள் ரோஜா, கும்மனேனி ஜெயராம் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கி தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரோஜா, “அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள். இந்தியா பெயரை பாரத் என மாற்றுவதால் தவறு இருக்கும் என நான் கருதவில்லை. நமது வழக்கத்தில் உள்ளது பாரத தேசம் என அழைத்து வருகிறோம். ஆங்கிலத்தில் இந்தியா என அழைப்பதை காட்டிலும் பாரத் என மாற்றிவதில் எந்தவித தவறும் இல்லை” என தெரிவித்தார்.