Homeசெய்திகள்இந்தியாமே 10-ம் தேதி வரை விமான நிலையங்கள் தற்காலிகமாக முடக்கம்…

மே 10-ம் தேதி வரை விமான நிலையங்கள் தற்காலிகமாக முடக்கம்…

-

- Advertisement -

நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மே 10-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.மே 10-ம் தேதி வரை விமான நிலையங்கள் தற்காலிகமாக முடக்கம்…காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள 9 தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி அழித்தனா். இந்த தாக்குதலில் சுமார் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இருநாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதை தடுக்க எல்லையில் முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டன. இதையும் மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.மே 10-ம் தேதி வரை விமான நிலையங்கள் தற்காலிகமாக முடக்கம்…இதனையடுத்து, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலுள்ள இந்திய விமான நிலையங்களில் விமான சேவைகளை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட், பிகானீா், குவாலியா் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளிலுள்ள விமான நிலையங்கள் நேற்று இரவு முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஏா்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை மே 10-ம் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னை விமான நிலையத்தில் 5 வருகை விமானங்கள், 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. போர் பதற்றம் காரணமாக இந்திய அரசு வான் மண்டல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹிண்டன், மும்பை, சண்டிகர், ஷிவமோகா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

MUST READ