spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்.....பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!

நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்…..பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!

-

- Advertisement -

 

நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்.....பெண்களுக்கு சலுகைகளை அள்ளி வீசும் பா.ஜ.க.!
Photo: CM Shivraj Singh Chouhan

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சித் தக்க வைக்க பெண்களைக் கவரும் வகையில் மாத உதவித்தொகை அதிகரிப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர் என பல்வேறு திட்டங்களை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

we-r-hiring

ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக சபரிமலை நடைத்திறப்பு!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், பெண்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்து வருகிறார்.

அதன்படி, பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் 1,250 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், இது படிப்படியாக 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

கேரளாவில் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை!

450 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனவும், இதனை நிரந்தரமாக செயல்படுத்த திட்டம் வகுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அரசுப் பணிகளில் பெண்களுக்கென்று உள்ள 30%, 35% ஆக உயர்த்தப்படும். ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50% ஆக இருக்கும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

MUST READ