

பெங்களூருவில் தோட்டப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குப்பைமேனி கீரை சூப் செய்வது எப்படி?
கர்நாடகா மாநிலத்தின் தலைநகராக திகழும் பெங்களூரு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு பொய்த்து போன தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளிலும் குறைவான தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இப்படியான சூழலில் தற்போது கோடைக்காலம் நெருங்கியிருப்பதால் மாநகரின் பல்வேறு பகுதி மக்களும் தண்ணீர் இல்லாமல் கடும் அவதியடைந்தனர். பெங்களூருவுக்கு வழக்கமாக வழங்கப்படும் அளவை விட குறைந்த அளவில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
பாட்டி கால ஸ்வீட்….. ஒருமுறை செய்து பாருங்கள்!
இந்த நிலையில், பெங்களூருவில் தோட்டப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் என எந்த பணிகளுக்கும் குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது என கர்நாடகா குடிநீர் வழங்கல் துறை மற்றும் கழிவுநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


