மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ளனர்.
இந்த சூழலில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று (பிப்.08) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர மாநில முதலமைச்சரும், ஒய்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, மக்களவைத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவைக் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எலிக் காய்ச்சல் பாதிப்பு….10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து ஆந்திர மாநில தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆந்திராவில் வலுவான கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள பா.ஜ.க. தலைமை, கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறவும் திட்டமிட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.