spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"பன்முக ஆளுமைக் கொண்டவர் விஜயகாந்த்"- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

“பன்முக ஆளுமைக் கொண்டவர் விஜயகாந்த்”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

-

- Advertisement -

 

"உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்"- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!
Photo: PM Narendra Modi

விஜயகாந்த் பன்முக ஆளுமைக் கொண்டவர்; பிறருக்காக தனது வாழக்கையை வாழ்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

we-r-hiring

“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”

மறைந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், விஜயாகாந்த் மறைவால் பலர் நல்ல தலைவரை இழந்தனர்; நான் அன்பான ஒரு நண்பரை இழந்துவிட்டேன். திரைப்படங்களில் அநீதி, ஊழல், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்க்கும் கதா பாத்திரங்களில் நடித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் விஜயகாந்த் அரசியலில் இறங்கினார்.

விஜயகாந்த் பன்முக ஆளுமைக் கொண்டவர்; பிறருக்காக தனது வாழக்கையை வாழ்ந்தவர். அனைவரின் முன்னேற்றம், சமூக நீதிக்கான விஜயகாந்தின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்” உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பொங்கலுக்கு ரேஷன் அட்டைக்கு ரூபாய் 3,000 வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

இதனிடையே, திருச்சியில் நேற்று (ஜன.03) நடந்த அரசு விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த் குறித்தும், அவரது மறைவுக்கு தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ