Homeசெய்திகள்இந்தியாசென்னையில் இருந்து ஒடிஷாவுக்கு செல்வதற்கு விமான கட்டணம் இவ்வளவா?- பயணிகள் அதிர்ச்சி!

சென்னையில் இருந்து ஒடிஷாவுக்கு செல்வதற்கு விமான கட்டணம் இவ்வளவா?- பயணிகள் அதிர்ச்சி!

-

- Advertisement -

 

சென்னையில் இருந்து ஒடிஷாவுக்கு செல்வதற்கு விமான கட்டணம் இவ்வளவா?- பயணிகள் அதிர்ச்சி!
File Photo

ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்றின் மீது ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில், சுமார் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 700- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் சார்பிலும், பிரதமர் சார்பிலும், மாநில அரசுகள் சார்பிலும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், சீரமைப்புப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளனர். இதனிடையே, இன்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து கோரமண்டல் ரயில் சேவை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணவும், படுகாயமடைந்தவர்களை அவரது உறவினர்கள் மருத்துவமனைகளில் சென்று பார்க்கவும் படையெடுத்துள்ளனர். அத்துடன், பல்வேறு மாநில அரசுகள் சார்பில் அரசு உயரதிகாரிகள் ஒடிஷாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் ஒடிஷா வழித்தடத்திற்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் இருந்து ஒடிஷா மாநிலம், புவனேஸ்வருக்கு செல்ல குறைந்த பட்ச கட்டணம் 7,000 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 10,000 ஆகவும் நிர்ணயித்துள்ளது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம். அதேபோல், சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 13,626 ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 27,801 ஆகவும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, பல மடங்கு விமான கட்டணத்தை உயர்த்திய விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் விமான பயணிகள்.

சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!

விமான கட்டண உயர்வால், ரயில்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்திற்கு அங்கு செல்ல முடியவில்லை என்றும் பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

MUST READ