
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதை விட, அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியை பா.ஜ.க. பெறும். அண்மையில் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலும் நல்ல தொண்டர்களை முதலமைச்சர்களாக பா.ஜ.க. தேர்வுச் செய்துள்ளது.
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐசி’…. முதலில் இந்த டாப் ஹீரோ தான் நடிக்க இருந்தாரா?
கட்சியின் சாதாரண தொண்டர்கள் தான் அதன் மிகவும் மதிப்பு வாய்ந்த உறுப்பினர்கள். முன்னாள் முதலமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், ராமன் சிங், வசுந்தரா ராஜே உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட தலைவர்களுக்கு பதிலாக புது முகங்களைத் தேர்வுச் செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, அந்த தலைவர்கள் அனைவரும் கட்சி அவர்களுக்கு மோதிய வாய்ப்பு அளிக்கும் வரை சாதாரண தொண்டர்களாக இருந்தவர்கள் தான் எனக் கூறினார்.
நாட்டை மகத்தான நிலைக்கு கொண்டு செல்ல பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என மக்கள் நம்புவதால், அவர்கள் மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டிருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மோடி தமக்காகவே, கட்சிக்காகவோ எதுவும் செய்ததில்லை. பிரதமர் நரேந்திர மோடி செய்தது நாட்டுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் எனக் கூறினார்.
சில கடுமையான முடிவுகள் எடுக்க நேர்ந்த போது, பா.ஜ.க. தொண்டர்களே அது கட்சிக்கு பாதகமாக இருக்கும் என கருதியதாகக் கூறினார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி, கடுமையான நடவடிக்கைகளை நாட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு எடுத்ததாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதனால் தான் இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து செயலாற்றி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்த அமித்ஷா, இந்தியா கூட்டணி இந்தியாவில் செய்தி தொலைக்காட்சிகளைத் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை.
வசந்த் ரவியின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!
பொது சிவில் சட்டத்தையும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் அமல்படுத்துவதில் பா.ஜ.க. உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.