Homeசெய்திகள்இந்தியாபருவநிலை மாற்றம் தொடர்பாக ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!

-

- Advertisement -

 

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!
Photo: PM Narendra Modi

ஜி20 மாநாட்டுக் கூட்டு பிரகடனத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வது குறித்த முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

ஜி20 மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களை பருவநிலை மாற்ற பிரச்சனையை எதிர்கொள்வது குறித்த அம்சங்கள் முக்கிய இடம் பெற்றது. இதில், பருவநிலை மாற்றப் பாதிப்புகளைத் தடுக்க உருவாக்க ஏற்படுத்தப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தை உறுதிப்படப் பின்பற்ற இந்த மாநாட்டில் உறுதி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பருவநிலை மாற்றப் பிரச்சனைகளை சமாளிக்க ஒதுக்கப்படும் நிதியின் அளவை பில்லியன் டாலர்களில் இருந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவது குறித்தும், இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. 2050- க்குள் இலக்குகளை எட்ட 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி சிக்கனம் தரும் பொருட்கள் உற்பத்தியை இரட்டிப்பாக்கவும், மரபுசாரா எரிசக்தியை இன்னும் ஏழு ஆண்டுகளில் மூன்று மடங்காக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அடிப்படையிலான எரிப்பொருள் பயன்பாட்டைக் குறைக்க கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவையே பின்பற்றுவது என்றும் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!

உயிரி எரிப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், இதற்காக சர்வதேச உயிரி எரிப்பொருள் கூட்டணியை உருவாக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் புதிய வழிமுறைகளைக் காணவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நச்சு வாயு உமிழ்வை 2030- ஆம் ஆண்டுக்குள் 43% அளவிற்கு குறைக்கவும் உறுதிப்படுத்தப்பட்டது.

MUST READ