சட்டமன்ற வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினர்
கர்நாடக சட்டமன்ற வளாகத்தை பசுமாட்டு கோமியத்தால் காங்கிரஸ் கட்சியினர் சுத்தம் செய்தனர்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று முதல் சட்டப்பேரவை கூட்டம் துவங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகர் ஆர் வி தேஸ்பாண்டே தலைமையில் ஒவ்வொருவராக பதவி ஏற்று வருகின்றனர். இன்று சட்டமன்ற கூட்டத் தொடர் துவங்கும் முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் அந்தணரை அழைத்து வந்து சட்டமன்ற வளாகம் முன்பு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அப்போது பசுமாட்டு கோமியத்தை தெளித்து சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகர் என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் ஊழல் ஆட்சி அகற்றப்பட்டாலும் அவர்கள் கால் வைத்த இடம் இன்னும் அசுத்தமாகவே உள்ளதாகவும் எனவே அதை அவர்களது நம்பிக்கையின் படியே பசுமாட்டு கோமியத்தை தெளித்து சுத்தப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். இதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.