Homeசெய்திகள்இந்தியாபைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை

பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை

-

- Advertisement -

பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை

பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

'Incriminating Data Seized': Probe Agency After Searches At BYJU's
பெங்களூருவில் உள்ள பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 2011-2023 வரையிலான காலகட்டத்தில் பைஜூஸ் நிறுவனம் ரூ.28,000 கோடி அந்நிய நேரடி முதலீடு பெற்றதில் விதிமீறல் ஏற்பட்டது. 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி விவரங்கள், கணக்குகளை பைஜூஸ் நிறுவனம் சமர்பிக்கவில்லை என்றும் புகார் அளித்துள்ளனர்.

பைஜூஸ் நிறுவனம் வழங்கிய விவரங்களை கொண்டு உண்மைத் தன்மை ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தனிநபர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் பைஜூஸ் நிறுவனம் மீது விசாரணை நடப்படுகிறது. புகார் தொடர்பாஜ பைஜூஸ் சி.இ.ஓ. ரவீந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சோதனையில் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

MUST READ