நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வளர்ச்சியின் பலன்கள் ஏழை மக்களை அடையத் தொடங்கியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது.
அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!
எங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது. சமூக நீதியை அரசின் கொள்கையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறோம். ஊழல் ஒழிப்பையும், வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம். மக்கள் மீண்டும் வலுவான பெரும்பான்மையுடன் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள்.
வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!
80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் உணவுப் பொருட்கள் சென்றடைந்துள்ளன. ஒவ்வொரு வீடுகளுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் என தனித்தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.