Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியானது...முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி!

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியானது…முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி!

-

- Advertisement -

 

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியானது...முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சி!
File Photo

மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கியது.

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்?

முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதால், அந்த கட்சியினர் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பெங்களூருவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 25 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஹெச்.டி.குமாரசாமி அதிர்ச்சியில் உள்ளார். ஏனென்றால், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தனது கட்சியின் ஆதரவை நாட வேண்டும் என்று எண்ணியிருந்தார்.

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… மிரட்டலா ஒர்க் அவுட் பண்ணி அசத்திய ரோபோ ஷங்கர்!

ஆனால் நிலைமை தலைக்கீழாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேர்தல் முடிவுகளைப் பார்த்து அதிர்ச்சியில் உள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி.

MUST READ