Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்?

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்?

-

- Advertisement -

 

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்?
Photo: ANI

மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கியது.

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… மிரட்டலா ஒர்க் அவுட் பண்ணி அசத்திய ரோபோ ஷங்கர்!

முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது, 117 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத போதும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில் உள்ளார். முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சித்தராமையா வீட்டில் இருந்து புறப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றார்.

தற்போது நிலவரப்படி, பா.ஜ.க. 71 தொகுதிகளிலும், ம.ஜ.க. 30 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 06 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

‘சீதாராமம்’ இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் பிரபாஸ்!

இதனிடையே, கட்சித் தாவலைத் தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வர அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பெங்களூருவில் குவிந்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ