மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்
மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி மாற்றம் செய்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள துறைகளுடன் சேர்த்து சட்டத்துறையை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்த கிரிண் ரிஜிஜூ மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றம் ஜனாதிபதி மாளிகையின் அறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஜிஜு ஜூலை 8, 2021 அன்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன், அவர் மே 2019 முதல் ஜூலை 2021 வரை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
உச்சநீதிமன்றம் மற்றும் கொலிஜியம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் இருந்து அவரது இலாக்கா பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சருடைய கருத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி பல நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.