
மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் இணைந்திருக்கிறார். அவர் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 02) பதவியேற்றுக் கொண்டார். அத்துடன், அஜித்பவாரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அஜித்பவார் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், “தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகுவது புதிதல்ல. கடந்த 1980- ஆம் ஆண்டு கட்சியில் 58 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்; பின்னர் பலர் விலகிய நிலையில் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். நான் கட்சியைப் பலப்படுத்திய நிலையில் கட்சியில் இருந்து விலகியவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தனர். எது நடந்தாலும் நான் கவலைப்படவில்லை; விரைவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
இதனிடையே, துணை முதலமைச்சராகப் பதவியேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித்பவார், “தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது. தேசியவாத காங்கிரஸ் மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ்; வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.