Homeசெய்திகள்இந்தியாவாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரியை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற கொடூரம்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரியை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற கொடூரம்

-

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரியை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற கொடூரம்

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் காய்கறி வியாபாரி ஒருவர் ரூ.3,000 ரூபாய்க்காக நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Shocking Video: Garlic Trader Stripped, Paraded Naked Over ₹3,000 Debt In Noida Fruit Market

நொய்டாவில் 3,000 ரூபாய் கடனை செலுத்தாததற்காக காய்கறி வியாபாரியை சரமாரியாக அடித்து, சந்தையில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய இரு குற்றவாளிகளை நொய்டா போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Noida vegetable vendor thrashed, paraded naked over loan of Rs 3,000; 2 arrested - India Today

சுந்தர் என்ற நபரிடம் அமித் என்ற வியாபாரி ரூ.5,600 கடனாக வாங்கியுள்ளார். அதில் அமித் 2,500 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால் மீதமுள்ள பணத்தை பின்னர் செலுத்த ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், தனது நண்பர்களை அழைத்து, கடனை உரிய நேரத்தில் செலுத்தாததால் அமித்தை அடித்து உதைத்தார். பின்னர் அந்த கும்பல் அவரை நிர்வாணமாக்கி சந்தையை சுற்றி ஊர்வலம் சென்றது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நொய்டா போலீஸார் தலையிட்டு பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள சுந்தர் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

MUST READ