Homeசெய்திகள்இந்தியாஒடிசா கடற்பகுதியில் பெரும் சோகம்: இரும்புத் தாதுக்களுடன் பனாமா சரக்குக் கப்பல் மூழ்கியது - 24...

ஒடிசா கடற்பகுதியில் பெரும் சோகம்: இரும்புத் தாதுக்களுடன் பனாமா சரக்குக் கப்பல் மூழ்கியது – 24 மாலுமிகளைத் தேடும் தீவிரப் பணி!

-

- Advertisement -

ஒடிசா மாநிலம் பரதீப் துறைமுகப் பகுதியில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா கொடி தாங்கிய பிரம்மாண்ட சரக்குக் கப்பல் வங்காள விரிகுடாவில் திடீரென மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கப்பலில் பயணம் செய்த 24 மாலுமிகளில் இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

we-r-hiring

விபத்தின் பின்னணி

‘எம்வி ஓஷன் வின்னர்’ (MV Ocean Winner) எனப்படும் பனாமா நாட்டைப் பதிவு செய்த சரக்குக் கப்பல், ஒடிசாவில் வெட்டி எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான டன் இரும்புத் தாதுக்களை ஏற்றிச் கொண்டு சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்டது. ஒடிசாவின் பரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் நடு கடலில் நள்ளிரவில் இக்கப்பல் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது.

கடந்த சனிக்கிழமை முற்பகலில் இக்கப்பலுக்கும் தரைட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, கப்பலின் உரிமையாளர் நிறுவனம் உடனடியாக இந்தியக் கடல்சார் அதிகாரிகளுக்கு அவசர உதவி கோரித் தகவல் தெரிவித்தது.

பன்னாட்டு மாலுமிகள் மற்றும் மீட்புப் பணிகள்

விபத்துக்குள்ளான கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில்:

  • சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள்: 20 பேர்

  • மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்: 3 பேர்

  • பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்: 1 பேர்

தகவல் கிடைத்தவுடன், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) உடனடியாகச் செயல்பட்டு அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த ‘எம்டி ஐசோபோஸ்’ (MT Aisopos) என்ற வணிகக் கப்பலின் உதவியை நாடியது. அந்த வணிகக் கப்பல் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கடலில் மிதந்த உயிர்க்காப்புக் படகுகளில் இருந்து 2 மாலுமிகளைப் பத்திரமாக மீட்டது.

கடற்படை மற்றும் விமானப் படை குவிப்பு

காணாமல் போன மற்ற 22 பணியாளர்களை மீட்கும் பணி தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியக் கடலோரப் காவல்படையின் அதிநவீன போர்க்கப்பல்களான ‘வரத்’, ‘அன்மோல்’ மற்றும் ‘விஜித்’ ஆகியவை மீட்புக் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

மேலும், வங்காள விரிகுடா கடற்பரப்பு முழுவதும் இந்தியக் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களும், ஹெலிகோப்டர்களும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் மாயமான மாலுமிகளைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஒடிசா கடற்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே மாதரம் தீர்மானம்: ‘இது இந்தியாவின் கவுரவம் சார்ந்த விஷயம்’ – பாஜக தலைவர் நிதின் நபீன் அதிரடி!

MUST READ