Homeசெய்திகள்இந்தியாசிறையில் வாடும் மணீஷ் சிசோடியா- கண்கலங்கிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

சிறையில் வாடும் மணீஷ் சிசோடியா- கண்கலங்கிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

-

 

சிறையில் வாடும் மணீஷ் சிசோடியா- கண்கலங்கிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
Photo: ANI

டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை நினைத்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண் கலங்கினார்.

‘பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சி.பி.ஐ. அமைப்பைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா, தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் இன்று (ஜூன் 07) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற கல்வித்துறைச் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவை நினைத்துக் கண் கலங்கினார்.

இது விழாவில் பங்கேற்றிருந்த ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களிடையேயும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு ஒருநாள் மட்டும் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உயரிய சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அவரின் உடல்நிலை தற்போது தேறி வருவதாக தகவல் கூறுகின்றனர்.

MUST READ