Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

-

புதுச்சேரியில் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய அரசைக் கண்டித்தும், புதுச்சேரியை ஆளும் அரசு, ரேஷன் கடைகளைத் திறக்காதது, பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி புதுச்சேரியில் அதிமுக சார்பில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏஎப்டி மைதானத்தில் இருந்து தொடங்கியது.

இதில் அதிமுக அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், எம்.பி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் முன்னிலையுல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

 

MUST READ