Homeசெய்திகள்இந்தியா3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்!

3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்!

-

- Advertisement -

 

தீபாவளி முடிந்து சென்னை நோக்கிப் படையெடுத்த மக்கள்!
Video Crop Image

காத்திருப்போர் பட்டியலே இல்லாமல் அனைவருக்கும் முன்பதிவு டிக்கெட் கிடைக்கும் வகையில் புதிதாக 3,000 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வே துறையை மேலும் சிறப்பாக மாற்றுவதற்கான விரிவாக்கத் திட்டத்திற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தி வில்லேஜ் தொடரின் ட்ரைலர் வெளியானது

2027- ஆம் ஆண்டு கூடுதலாக தினசரி 3,000 ரயில்களை புதிதாக இயக்குவதற்கான பணிகளை ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். காத்திருப்போர் பட்டியலே இல்லாமல் ரயில் பயணிகள் அனைவரும் முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்கும் வகையில் போதிய ரயில்களை இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தாலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ரயில் சேவைகள் போதுமானதாக இல்லை என்று பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும், சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்து விடுவதால், ஏராளமான பயணிகள் பொதுப்பெட்டியில் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.

ஜப்பான் படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்….. அடுத்த ப்ளானுடன் களமிறங்கிய கார்த்தி!

இதனை தவிர்க்க, இப்போது நாடு முழுவதும் 10,748 ரயில் சேவைகளை 13,000 ஆக அதிகரிக்க ரயில்வே உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்திற்கு ரயில்வே தயாராகி வருகிறது.

MUST READ