
பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் தான் எடுத்த பேட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 4 மாத குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!
கடந்த 2019- ஆம் ஆண்டில் ஜம்மு- காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசு தான் காரணம் என முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்து வரும் நிலையில், சத்யபால் மாலிக்கைச் சந்தித்து, அவரிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி எம்.பி. சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி எம்.பி., “மத்திய அரசின் தவறால் தான் புல்வாமா தாக்குதல் அரங்கேறியது; இது குறித்து எதுவும் வெளியே கூற வேண்டாம்” என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!
தேர்தலுக்காக அந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், சம்பவம் நடந்து மூன்றாவது நாளில் அரசியலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, அது குறித்து வாய் திறந்து பேசியதாகவும் விமர்சித்துள்ளார். அதானி குழுமம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்யபால் மாலிக், “பெரிய கிடங்குகளைக் கட்டமைத்து, குறைந்த விலைக்கு பயிர்களை அதானி கொள்முதல் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு பயிர்களின் விலை அதிகரிக்கும்; அவற்றை அதானி விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்தப்பட்டால், விளைபொருட்களை அதானியிடம் விற்க வேண்டிய நிலை ஏற்படாது. மணிப்பூர் மாநிலத்தில் மோசமான சூழல் நிலவுகிறது; எதுவும், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.