Homeசெய்திகள்இந்தியாகடலில் மூழ்கி 4 பேர் மாயம்!

கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!

-

 

கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!

புதுச்சேரியில் கடலில் குளித்த நான்கு பேரை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து,காவல்துறையினர், கடலில் மூழ்கியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…

புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள பழைய துறைமுகம் அருகே உள்ள கடலில் மோகனா (வயது 16), லேகா (வயது 14), நவீன் (வயது 12), கிஷோர் (வயது 16) ஆகியோர் குளித்துள்ளனர். அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலை, சிறுவர்கள், சிறுமிகளை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து, கடலில் மூழ்கி மாயமான நான்கு பேரை காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் இன்றிரவு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த சோக சம்பவம், சுற்றுலாப் பயணிகளைக் கவலையடைய செய்துள்ளது.

பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்சன் காலமானார்

இதையடுத்து, கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ