
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களைத் தாக்கப்படுவதாக வீடியோ பரவி, அது மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோக்களைப் பதிவேற்றியவர் யூ-டியூபர் மணீஷ் காஷ்யப். அவரை அதிரடியாக கைது செய்த தமிழக காவல்துறை, அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
அதேபோல், பீகார் மாநிலத்திலும் மணீஷ் காஷ்யப் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநில சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
இந்த நிலையில், தன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூ-டியூபர் மணீஷ் காஷ்யப், டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் – விருதுநகர் மாவட்டம் முதலிடம்
இந்த மனு இன்று (மே 08) காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைதியான தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக் கூடாது என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, மணீஷ் காஷ்யப் வைத்த கோரிக்கையையும், அவர் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை நாடவும் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.