spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதெலங்கானாவில் பிஆர்எஸ்ஸின் 'காரை' நிறுத்தியது 'கை'!

தெலங்கானாவில் பிஆர்எஸ்ஸின் ‘காரை’ நிறுத்தியது ‘கை’!

-

- Advertisement -

 

we-r-hiring

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது. பிஆர்எஸ் கட்சியின் சின்னமான காரை நிறுத்தி காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் வெற்றி முகமாக உள்ளது.

டிச.6ல் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் – கார்கே அழைப்பு..

கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்து சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இருந்து வருகிறார். தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 60- க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது.

இரண்டு முறை முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவ் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிஆர்எஸ் 40 தொகுதிகளிலும், பா.ஜ.க 11 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

MUST READ