Homeசெய்திகள்இந்தியா"சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?"- பிரியங்கா காந்தி கேள்வி!

“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!

-

- Advertisement -

 

"சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?"- பிரியங்கா காந்தி கேள்வி!
Video Crop Image

தேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள்? என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “மக்களுக்காக வேலைச் செய்யும் உண்மையான தலைவர், சாதி, மதத்தை வைத்து வாக்கு கேட்க மாட்டார். அவரின் உழைப்பின் அடிப்படையில் மக்களிடம், வாக்கு கேட்பார்” என்று பா.ஜ.க.வை சாடினார்.

கடந்த 18 ஆண்டுகளாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க.வினர் ஆட்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தாங்கள் செய்த எந்த வேலையையும் கூறி வாக்குக் கேட்பதில்லை. மாறாக, சாதி, மதம் போன்றவற்றைப் பேசி வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. பிளவுப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தலைவர்கள், தொண்டர்கள் என்று காங்கிரஸ் கட்சியில் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டக் களத்தில் இறங்கியதால், பா.ஜ.க. முற்றிலும் பிளவுப்பட்டுள்ளது.

தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும்” என்று பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மொத்தம் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற நவம்பர் 25- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ