இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என அழைக்கப்படும் புதுச்சேரியின் விடுதலை நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சுகாரர்கள் ஆதிக்கத்தில் 300 ஆண்டுகள் இருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. ஆனால் பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரிக்கு அப்போது விடுதலை கிடைக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து, சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி மக்களின் கருத்துக்கேட்பு நடத்தி, 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரிக்கு, பிரெஞ்ச் ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்தது. 2014 வரை ஆகஸ்ட் 16-ம் தேதிதான் புதுச்சேரியின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
இதற்கும் எதிர்ப்பு வந்த நிலையில், 2014-ல் சுதந்திர தினத்தின் வரலாறு குறித்து முறையான ஆய்வு நடத்தப்பட்டு, நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியின் விடுதலை தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நாள் புதுச்சேரியின் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற வண்ணமயமான விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு ஏனாம், மாஹே, காரைக்கால் பகுத்யிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மாலையில் கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.