Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!

எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!

-

- Advertisement -

எளிமையான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

தேங்காய் பாலுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமடையும்.எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!

அதே சமயம் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று பலரும் கூறுவார்கள். அதுபோல தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்சனை குணமாகும். மேலும் தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் இதயம் பலமடையும்.

மேலும் குங்குமப்பூவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர சுவாசக் குழாயில் ஏற்படும் அலர்ஜி குணமாகும்.

ஆவாரம் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய் குணமடைவதோடு நம் சருமமும் பளபளப்பாக மின்னும்.

வில்வம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர மூளை தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

ஆடாதொடை மூலிகையின் இலை சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமடையும்.எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!

திருநீற்றுப்பச்சிலை மூலிகையை அரைத்து நம் உடலில் ஏற்படும் கட்டிகளின் மீது தடவி வர கட்டிகள் கரையும்.

வெற்றிலையையும் பூண்டையும் ஒன்றாக அரைத்து தேய்த்து குளித்து வர தோலில் ஏற்படும் தேமல் குணமாகும்.

மஞ்சள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து குளித்தால் முகப்பருக்களும் தழும்புகளும் மறையும்.

அதிமதுரத்தினை காயவைத்து பொடியாக்கி அதனை கசாயம் செய்து குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!

சிறிதளவு சந்தனம், ஜாதிக்காய் ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி தண்ணீருடன் குழப்பி முகத்தில் தடவி வர முகப்பருக்கள் மறைந்து சரும மென்மையாக மாறும்.

வல்லாரைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் குணமாகும்.

ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த திராட்சை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

திராட்சை பழங்கள், செர்ரி பழங்கள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!

சீதாப்பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வர மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் நெருங்கவே நெருங்காது.

சுரைக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து வர அது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை உண்டாக்கும். மேலும் வெப்பு நோய்கள் ஏற்படாது. மஞ்சள் காமாலை நோயும் ஏற்படாது.

சர்க்கரை நோயை குணப்படுத்த பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன் பாகற்காயானது சொறி, சிரங்கு ஏற்படாமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது.எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!

மருதாணியை அரைத்து, அதில் கற்பூரம் சேர்த்து கலந்து கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

வல்லாரையை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

இருப்பினும் உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொண்டு இம்முறைகளை எல்லாம் பின்பற்றுவது நல்லது.

MUST READ