spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திருவேற்காடு அரசுப்பள்ளியில்  ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்

திருவேற்காடு அரசுப்பள்ளியில்  ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்

-

- Advertisement -

திருவேற்காடு அரசுப்பள்ளியில்  ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில்  அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டுமென பெற்றோர்கள், மாணவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை  வைக்கப்பட்டது. இதனையடுத்து        ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் 10 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்ததாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

திருவேற்காடு அரசுப்பள்ளியில் ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்

we-r-hiring

இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் பரந்தாமன், தலைமை ஆசிரியை அனிதா,  உதவி தலைமை ஆசிரியர் செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

MUST READ