அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது- கடம்பூர் ராஜூ
அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரும் போராட்டத்தில் குதித்தனர். கூட்டணி கட்சிகளிடையே இந்த பிரச்னையால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை, இந்த அண்ணாமலை இல்லை. லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது. அதிமுக வரலாறு அவருக்கு தெரியாது. அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை. அதிமுகவின் வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது. பாஜகவினர் அதிமுகவில் இணைந்ததை கண்டு அண்ணாமலையும், பாஜகவினரும் ஏன் பதற்றமடைய வேண்டும். ஒரு கட்சியிலிருந்து பிரிந்து மற்றொரு கட்சிக்கு செல்வது வழக்கமான ஒன்றுதான்” எனக் கூறினார்.