Homeசெய்திகள்அரசியல்ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக- ஜெயக்குமார்

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக- ஜெயக்குமார்

-

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக- ஜெயக்குமார்

பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் ஆர்ப்பாட்டம் என்பது அச்சாணியே இல்லாத வண்டி போன்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பொழுதுபோகாத காரணத்தால் பன்னீரும், டிடிவியும் போராட்டம் அறிவித்துள்ளனர். பொழுது போக்கிற்காக கோடநாடு விவகாரத்தை, கையில் எடுத்து ஓபிஎஸ் போராட்டம் நடத்துகிறார். அச்சாணி இல்லாத வண்டியை டிடிவி தினகரன் ஓட்டுகிறார். ஊழலை பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை, ஊழலுக்கு எதிராக அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வது, அவரது கட்சியை வளர்க்க செல்கிறார். ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதிக்கு நடத்துவதே திமுகவின் முப்பெரும் விழா. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். ஊழலில் திளைத்த திமுகவை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டும் பணியை அதிமுக செய்துவருகிறது.

செந்தில்பாலாஜி இருந்தபோதும் இல்லாதபோதும் டாஸ்மாக் கடைகளில் வசூல்வேட்டை தொடர்கிறது. ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைப்பது எந்த விதத்தில் நியாயம்? மகளிர் உரிமைத் தொகை வழங்க போக்குவரத்து விதிமீறல் மூலம் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, எம்ஜிஆர் கொண்டுவந்த திட்டங்களை செயல்படுத்தும் ஒரே ஆட்சி அதிமுக ஆட்சிதான். நிர்வாக திறனற்ற விடியா திமுக ஆட்சியில் தங்கத்திற்கு நிகராக விற்கும் நிலைக்கு தக்காளி விலை சென்றுவிட்டது” என்றார்.

MUST READ