Homeசெய்திகள்அரசியல்இவர்களுக்கு எல்லாம் கட்சியில் இடமில்லை! சாட்டையை சுழற்றிய முதல்வர்

இவர்களுக்கு எல்லாம் கட்சியில் இடமில்லை! சாட்டையை சுழற்றிய முதல்வர்

-

- Advertisement -

இவர்களுக்கு எல்லாம் கட்சியில் இடமில்லை! சாட்டையை சுழற்றிய முதல்வர்

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை கொண்டாட முடியாத அளவிற்கு பாஜகவின் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. திமுக ஆட்சியை எப்படியும் காலி செய்து விட வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரமாக இயங்கி வருகிறது பாஜக. இதனால் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினும் தனது கட்சி மற்றும் அமைச்சரவையில் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்.

அதனால் தான் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அமைச்சரவையில் இலாகா மாற்றங்களும் நடந்துள்ளன . இதற்கு அடுத்த கட்டமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய ஆலோசனைகளை நடத்த வேண்டும் என்பதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின்.

மா.செ.,க்களுடன் அவசர ஆலோசனை! முதல்வர் பேசியது என்ன?

இந்த கூட்டத்தில் ரொம்பவே கறார் காட்டி பேசி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உழைக்காதவர்களுக்கு எல்லாம் கட்சியில் இடமில்லை என்ற எடுத்த எடுப்பிலேயே சாட்டையை சுழற்றி இருக்கிறார் . தொடர்ந்து அது குறித்து பேசிய முதல்வர், மாவட்ட செயலாளர்களை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் வருகின்றேன். கட்சிப் பணிகளை ஒவ்வொருவரும் பொறுப்புடன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாற்றப்படுவீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்.

பூத்கமிட்டி நிர்வாகிகள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்காக திமுக அரசின் சாதனைகள் திமுக அரசு மக்களுக்கு செய்துள்ள திட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துரிதப்படுத்த வார்டு வாரியாக கூட்டம் நடத்த வேண்டும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கட்சியினர் நலன் சார்ந்தும் செயல் புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கும் முதல்வர், சுணக்கமாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் இனியாவது தங்கள் பணிகளை விரைவு படுத்த வேண்டும் . இல்லாவிட்டால் மாற்றப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார்.

MUST READ